districts

img

உலக அளவில் அரிதாக தாக்கும் நோய் “நோடோபதி” நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

மதுரை, ஜூன் 13- உலக அளவில் அரிதான நோயாக கண்ட றியப்பட்டுள்ள “நோடோபதி” எனும் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்  ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை நரம்பியல் சிகிச்சைப்பிரிவு மருத்து வக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து குணப்படுத்தி, சாதனைப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் டி.தர்மராஜ் (பொறுப்பு), நரம்பியல் சிகிச்சைப்பிரிவு தலைவர் ஜஸ்டின் ஆகியோர் செய்தியா ளர்களிடம் புதன்கிழமையன்று கூறியதா வது:   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யை சேர்ந்த ஷோபனா(28)  என்பவர் 8 மாத  கர்ப்பிணியாக இருந்த நிலையில், 2023  ஜூலை மாதம் கை,  கால்கள் திடீரென  செயலிழந்த நிலையில் கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவ ருக்கு நரம்பு மண்டல பாதிப்பான ஜிபிஎஸ் எனும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு  அவர் குணமடைந்ததை தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.  வீட்டுக்குச் சென்ற சில வாரங்களில் அவ ருக்கு மீண்டும்  பாதிப்பு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தையடுத்து மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்   கர்ப்பி ணியாக இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு  ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார்.

எதிர்ப்பு சக்தி,நல்ல நுண்ணுயிரிகளை அழிக்கும் 

மேலும் மதுரை அரசு மருத்துவ மனையிலேயே பிரசவத்துக்கும் அனுமதிக் கப்பட்டு சுகப்பிரசவம் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி குழந்தை பிறந்தது.  உடல்நிலை  குணமடைந்ததையொட்டி குழந்தையுடன் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தில் அவருக்கு மீண்டும் அதே நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து,  அவரது நோய் பாதிப்பு குறித்து  தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. பரிசோதனைகளின் முடிவில் ஷோப னாவுக்கு உலகில் மிக அரிதான நோயாக கண்டறியப்படும் “நோடோபதி” எனும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மண்ட லம், உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை யும் எதிரியாக நினைத்து அழிக்க முற்படு வதால் உருவாகும் பாதிப்பாகும்.  உலக அளவில் 4 முதல் 8 சதவீதம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும்.  இதை யடுத்து இந்த நோய் பாதிப்புக்கும் மிகவும்  விலை உயர்ந்த மருந்துகளை தமிழக அர சின் உதவியுடன் பெற்று சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. தொடர் சிகிச்சை மூலம் ஷோபனா படிப்படியாக குணமடைந்து தற்போது முழு உடல்நலம் பெற்று இயல்பு  வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அவரால் வழக்கம்போல நடக்கவும், கைகளை செயல்படுத்தவும் முடிந்துள்ளது. ஷோப னாவுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் விலை ரூ.15 லட்சமாகும், மேலும் சிகிச்சைக்  குரிய அனைத்து செலவுகளும் சேர்ந்து ரூ.20 லட்சம் ஆகும். இது முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அவருக்கு முற்றி லும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்  ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நரம்பியல் சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து ஷோபனாவை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்துள்ள னர்.  தொடர் சிகிச்சையால் ஷோபனாவுக்கு மீண்டும் அந்த பாதிப்பு ஏற்படாதவாறு தொடர் பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். .  மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பா ளர் செல்வராணி, நரம்பியல் சிகிச்சைப்பிரிவு  மருத்துவர்கள் முருகன், இளங்கோ, இருப்பிட மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, உதவி  மருத்துவ அலுவலர் விஜி ஆகியோர் உட னிருந்தனர். மேலும் சிகிச்சை மூலம் குண மடைந்த ஷோபனாவும் உடனிருந்தார்.