பாபநாசம், நவ.5 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை யிலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவை யாறு, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்பவர்களும் இந்தச் சாலை வழியே செல்கின்றனர். இந்தச் சாலை முடிவில் திருவையாறு செல்லும் சாலை, கும்பகோணம் செல்லும் சாலை என பிரிகிறது. கும்பகோணம் - திரு வையாறு சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தச் சாலையில், அரியலூரி லிருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டும், கரூர், பெரம்பலூரிலிருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டும் ஏராளமான கனரக வாகனங்கள் நாகப்பட்டினம், காரைக்கால் வரை செல்கின்றன. சாலை முடிவில் உள்ள திருப்பத்தில், வேகத்தடை இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. எனவே, இச்சாலையில் ஒளிரும் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.