கரூர், ஜன.10 - எல்ஐசி நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாட்டைக் கண்டித்து கரூரில் வெளி நடப்பு போராட்டம் நடைபெற்றது. எல்ஐசி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். புதிய ஓய்வு திட்டத்திற்கான நிர்வாக பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். காலியாக உள்ள பணியி டங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி யும், எல்ஐசி நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாட்டை கண்டித்தும் காப்பீடு கழக ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் எல்ஐசி கிளை-2 முன்பு ஒருமணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். கரூர் வைஸ்ய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஐ.வெங்கடேசன், எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் ராஜலட்சுமி, தீபா ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.