தஞ்சாவூர், பிப்.20- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அமிர்தா புத்தகம் நிலையத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி பிப்.19 முதல் மார்ச் 19 வரை ஒரு மாத காலம் வரை 10 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தவமணி தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க துணைச் செயலாளர் பேராசிரியர் வெ.சுகுமாரன் தலைமை வகித்தார். நெல்லுப்பட்டு இராமலிங்கம் வரவேற்றார். முதல் விற்பனை பிரதியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணவாளன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மன்னர் சரபோஜி கல்லூரி கெளர விரிவுரையாளர் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார். திராவிடச் செல்வம் நன்றி கூறினார்.