தஞ்சாவூர், ஜன.21 – தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரம் பகுதி யை சேர்ந்த வடிவேல் (47), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38). இவர்களுக்கு 13, 9 வய தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இரு வரும் சுற்றுவட்டாரப் பகுதி களில் இருந்து மொத்தமாக வைக்கோலை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கண வனும், மனைவியும் தனித் தனியாக வெவ்வேறு வியா பாரிகளிடம் வைக்கோலை விற்பனை செய்வதற்கு விலை பேசியுள்ளனர். இது தொடர்பாக, சனிக் கிழமை இரவு இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது மது போதையில் இருந்த வடிவேல் ஆத்தி ரத்தில் அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து கவிதாவின் தலை மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம டைந்த கவிதா நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று கவிதா உடலை மீட்டு உடற் கூராய்வு பரிசோதனைக் காக அய்யம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குட முருட்டி ஆற்றின் ஒரு திட்டு பகுதியில் பதுங்கி இருந்த வடிவேலை இரவோடு இரவாக கைது செய்தனர்.