தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா நேரில் சந்தித்துப் பேசினார். இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டன.