தஞ்சாவூர், ஜூன் 26-
கொரோனாவுக்கு பின்பு போக்கு வரத்து குறைவான பகுதிகளுக்கு இயக் கப்படாமல் நிறுத்தப்பட்ட, அரசு பேருந்து கள் இதுவரை மீண்டும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வர்த்தக தொடர்பு, வேலைக்கு சென்று வர, தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய உப கரணங்கள் வாங்கி வர, குழந்தைகள் கல்வி தொடர்பான பயணங்கள் உள்ளிட்ட முக்கிய பயணங்களை மேற்கொள்வதில் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இரவு 8 மணிக்கு மேல் பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து, பட்டுக் காட்டைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து கள் இயக்கப்படாததால் பட்டுக்கோட்டை செல்ல வேண்டிய பயணிகள், ஆவணம்-கைகாட்டி சென்று அங்கிருந்து பட்டுக் கோட்டைக்குச் செல்ல வேண்டியுள்ளது. 25 கி.மீ. தூரத்தில் செல்ல வேண்டிய பய ணத்திற்கு, இரவு நேரத்தில் 50 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் கால விர யமும், தேவையற்ற செலவீனமும் ஏற்படு கிறது. பட்டுக்கோட்டை செல்பவர்கள்கூட சுற்றிச்சென்று விடுகின்றனர். ஆனால், இடையில் உள்ள கொன்றைக்காடு, கால கம், ஒட்டங்காடு, துறவிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் ஆட்டோ பிடித்தும், பொருளாதார வசதி இல்லா தவர்கள் இரவில் பெண்கள், குழந்தைகளு டன் நடந்தும் செல்லும் நிலையும் உள் ளது.
அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத தால், தனியார் பேருந்துகளும் இயக்கப்படு வதில்லை. எனவே, பட்டுக்கோட்டைக்கு ஏற்கனவே இரவில் இயக்கப்பட்ட அனைத்து அரசுப் பேருந்துகளையும் இயக்காவிட்டாலும், இரவு 9 மணிக்கு ஒட்டங்காடு, துறவிக்காடு வழியாக பேருந்தை இயக்கினால் பொதுமக்களின் சிரமம் குறைவதோடு, அரசுப் போக்கு வரத்து கழகத்திற்கும் வருமானம் கிடைக் கும்.
மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து இர வில் பேராவூரணி திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். எனவே உடனடி யாக போக்குவரத்து துறையினர் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.