அறந்தாங்கி, செப்.5 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அனைத்து நகர ஆட்டோ சங்கம் ஏஐடியுசி, சிஐடியு சார்பில் அறந்தாங்கி கோட்டாட்சியரி டம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. முன்னதாக செக்போஸ்ட்டில் இருந்து அனைத்து ஆட்டோக்களும் ஊர்வலமாக சென்றன. போராட்டத்திற்கு நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆட்டோ நகரத் தலைவர் து.சேக ரன், ஆட்டோ நகரச் செயலாளர் கார்த்திக், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்-லைன் அபராத முறையை கைவிட வேண்டும். எப்.சி.க்கு செல்லும் ஆட்டோ விற்கு சான்று மற்றும் ஸ்டிக்கர்களுக்கு அநியாய கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு நிறை வேற்றியுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது. தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தி மானியம் வழங்கிட வேண்டும். ஆட்டோ தொழிலா ளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். நலவாரியத்தின் மூலம் பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வீடு கட்ட வழங்குவது போல், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர், கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த னர்.