திருச்சிராப்பள்ளி, செப்.25 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 8 ஆவது மாவட்ட பேரவை திருச்சியில் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி அஞ்சலி உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆறுமுகம் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செய லாளர் மதிவாணன் வாசித்தார். அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைகளை முழுவதுமாக நிவர்த்தி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் குறைந்தபட்ச பென்சன் ரூ.9000 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் செந்தமிழ்ச் செல்வன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் குருநாதன் வர வேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் முரு கேசன் நன்றி கூறினார்.