வேலூர், ஜூலை 31 - வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே செம்பக ராயநல்லூர் சமத்துவபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன். ஒன்றிய குழு துணைத் தலைவர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.