districts

img

மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை, பிப்.12 - புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி களில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 16 ஆவது போட்டிகளில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 250- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து  கொண்டனர். இதில் 8 ஆம் வகுப்பு மாண வர் பொன் பிரதீப் தங்கப் பதக்கம் பெற்றார்.  மாணவர் யுவராஜன், 5 ஆம் வகுப்பு பொன்  முகில், 9 ஆம் வகுப்பு மாணவர் நிலாசன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த பிரதோஷ், நித்திஷ்  மற்றும் 4 ஆம் வகுப்பு ரித்திக், 2 ஆம் வகுப்பு  நித்திஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பரிசுகளை வழங்கி னார். பள்ளியின் இயக்குநர் சுதர்சன் மற்றும்  துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் பாராட்டினர். டேக்வாண்டோ பயிற்சியாளர் சேது கார்த்திகேயன் உடனிருந்தார்.