பாபநாசம், அக்.30 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூ ராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மற்றும் சுய உதவிக் குழு பணியாளர்களுக்கு சீருடை கள், காலணிகள், சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட் டவை வழங்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை பணியின் மூலம் மறுசுழற்சி பொருட்கள் விற்பனை செய் யப்பட்டதிலிருந்து வரப் பெற்ற தொகையில் தலா ரூ.1500 வீதமும், தீபாவளி யையொட்டி பரிசுப் பொருள், இனிப்புகள் வழங்கப்பட் டன. இதில் செயல் அலுவ லர் பழனிவேல், பேரூராட்சி மன்றத் தலைவர் புனிதவதி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன், துப்பு ரவு ஆய்வாளர் செந்தில் குமார், துப்புரவு மேற் பார்வையாளர்கள் உட்பட அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.