திருவாரூர், செப்.9- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தின் மாவட்ட பேரவை சனிக் கிழமை நடைபெற்றது. பேரவைக்கு அமைப் பின் மாவட்டத் தலைவர் என். வசந்தன் தலைமை வகித் தார். மாவட்ட மாநில செயற் குழு உறுப்பினர் டி.ராஜ சேகரன் வரவேற்றார். மாநி லச் செயலாளர் ஜ.ஜம்ரூத் நிஷா துவக்க உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவக் குமார் நிதிநிலை அறிக்கை யையும் வாசித்தனர். மாவட்டத்தின் புதிய தலைவராக என்.வசந்தன், செயலாளராக கே.எஸ்.செந்தில், பொருளாளராக எஸ்.சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகரித்து வரும் போக்குவரத்தை சீர் செய் யும் வகையில், திருவாரூர் பேருந்து நிலையத்தி லிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை போக்கு வரத்து நெருக்கடியை போக்க உயர்மட்ட மேம்பா லம் அமைக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட நீடா மங்கலம் ரயில்வே மேம்பா லம் பணியை உடனடியாக துவங்கிட வேண்டும். மன் னார்குடி நகரத்தில் வெளி வட்ட சாலை அமைக்க வேண்டும். வலங்கைமான் புறவழிச் சாலை மற்றும் வலங்கைமா னில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அருகே பேருந்து நின்று செல் லும் இடத்தில், பயணிகள் இருக்கை வசதியுடன் ஒருங் கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே பேருந்து பயணிகள் பயன் படுத்தும் வகையில் பொது கழிவறை அமைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் அ. சௌந்தர பாண்டியன் நிறை வுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் டி.ஜெ.அமர்நாத் நன்றி கூறினார்.