districts

img

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்

சிபிஎம் வலியுறுத்தல் அரியலூர், அக்.10 - பட்டாசு ஆலைகளில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு நலவாரி யப் பயன்களும், உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகர ணங்களும் வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் ராஜேந் திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தொழிற்சாலையில் திங்க ளன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.  இதில் படுகாயமடைந்த 6 பேர்  அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையிலும், 6 பேர் தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எம்.இளங்கோவன்  தலைமை யில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.கிருஷ்ணன், மூத்த தலைவர் ஆர்.சிற்றம்பலம், திருமானூர் ஒன்றியச்  செயலாளர் ஆர்.புனிதன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.சாமிதுரை, அரியலூர் ஒன்றியச் செயலாளர் ஏ.அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆரோக்கியநாதன், பி.கலைமணி, லோகேஸ்வரன் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் கட்சியின் மாவட்டச் செய லாளர் இளங்கோவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருபவர்களுக்கு மருத்துவ செலவு மற்றும் உணவு செலவுகளை அரசு ஏற்க வேண்டும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது தமிழக அரசு. அந்த நிவாரணம் போதுமான தல்ல.  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய அரசு ரூ.10 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் என ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்க  வேண்டும். இந்த விபத்தில், கண வனை இழந்தவர்களின் பிள்ளை களது கல்விச் செலவை அரசே ஏற்க  வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலை களிலும் சோதனை மேற்கொண்டு, தயாரிக்கப்பட்ட வெடிகளை உடனுக் குடன் விநியோகிக்க வேண்டும்.  குடும்பத்தில் உள்ள வாரிசு களுக்கு அரசுப் பணி வழங்க வேண் டும். இதுபோன்று வெடி ஆலை களில் பணியாற்றக் கூடிய தொழிலா ளர்களுக்கு நலவாரியப் பயன்களை யும், உயிர் சேதம் ஏற்படாமல் இருப்ப தற்கு பாதுகாப்பு உபகரணங்களை யும் அரசு வழங்க வேண்டும்.  சிலர் பட்டாசுகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்று குடிசை தொழிலாக செய்வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் வேலை  செய்கிறவர்களுக்கு மாநில அரசு  பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விக்னேஸ்வரன், ஜெகன் உள்ளிட்ட ஆறு பேரிடம் நலம்  விசாரித்து ஆறுதல் கூறினர்.

உயிரிழந்தவர்களுக்கு  அரசு நிதியுதவி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி  விபத்தில் உயிரிழந்த குடும்பங்க ளுக்கு தமிழக அரசு சார்பில் செவ்வா யன்று நிதியுதவி அளிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தி னருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாய மடைந்தவர்களுக்கு தலா ரூ.1  லட்சமும், லேசான காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி திங்களன்று இரவு தஞ்சாவூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச் சர்கள் சி.வெ.கணேசன், சா.சி.சிவ சங்கர், அவர்களது குடும்பத்தின ருக்கு நிவாரண நிதியினை வழங்கி னர். அதனைத் தொடர்ந்து, இவ்விபத் தில் உயிரிழந்த விராகலூர் கிராமத் தைச் சேர்ந்த ரவி, சிவகாமி, வெண்ணிலா ஆகிய மூவரின் குடும்பத் தினருக்கு முதல்வரின் பொது நிவா ரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா செவ்வாயன்று வழங்கி னார்.

பட்டாசு உற்பத்தி, விற்பனைக் கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழு அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி  மற்றும் பட்டாசு விற்பனைக் கடைகளை  கண்காணிக்க சிறப்பு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ஊரகம் மற்றும்  நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி அலகு மற்றும் பட்டாசு விற்பனைக் கடைகள்  (தற்காலிகக் கடைகள் உட்பட) நடத்திட வெடிபொருள் சட்டத்தின்படி தீயணைப்புத்துறை, காவல்துறை, வரு வாய்த்துறை மற்றும் தொழில் பாதுகாப்புத் துறையின் தடையின்மைச் சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும். உரிமம் பெற்ற பின்பு, உரிமத்தில் குறிப்பிடப்பட் டுள்ள அளவின்படி இருப்பு வைத்துக் கொள்ள அனைத்து  பாதுகாப்புகள் குறித்த நடவடிக்கைகளை தவறாது  கடைபிடிக்க வேண்டும். உரிமதாரர்கள் உரிமத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படா மல் உள்ள நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்படு வதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  உரிமம் இன்றி, புதுப்பிக்கப்படாமல் இதுபோன்று உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக் கடைகள் செயல்படுவது தெரிய வந்தால், சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவற்றை ஆய்வு செய்ய சிறப்பு  தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.