districts

img

நீர்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்ய அனுமதித்திடுக வனத்துறையினரிடம் சிபிஎம் கோரிக்கை

தருமபுரி, ஜூலை 1- முழவடை நீர்பிடிப்பு பகுதியில் விவசாயம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தருமபுரி மாவட்ட வன அலுவலர் இராஜாங்கத் திடம் மனு அளித்தனர். இதுகுறித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர், பணங்காடு, ஒட்டப் பள்ளம், முனியப்பன் கோவில் ஆகிய பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் உள் ளன. இவர்கள் இங்கு சுமார் நூறு ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வரு கின்றனர். இக்கிராமத்திற்கு உட்பட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி நில வெளியேற்றம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இக்கி ராமத்தை ஒட்டியுள்ள ஆற்றோர பகுதி யில் தண்ணீர் இல்லா காலங்களில் விவசாயிகள், நிலக்கடலை, மிளகாய், கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இவ் வாறு முழவடை (நீர்பிடிப்பு பகுதி) சாகுபடி செய்வதை வனத்துறை யினர் தடை செய்து வருகின்றனர். இதனால் காலம் காலமாக சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். எனவே, முழவடை (நீர்பிடிப்பு) பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு அனு மதி அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். இதற்கு பதில அளித்து பேசிய  மாவட்ட வன அலுவலர் இராஜங்கம்  வனத்துறையினர் விவசாயம் செய்வதை  தடைசெய்ய மாட்டோம் என விவசாயிக ளிடம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபா லன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் ஏரியூர் ஒன்றியச் செயலாளர் என்.பி.முருகன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அ ருச்சுணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர்கே.என்.மல்லையன் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.