தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சோழ கன் குடிக்காடு அருகே உள்ள பரங்கி வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த, தியாக ராஜன் - ஜீவா தம்பதியின் மகள் திவ்யாவுக்கும், பட் டுக்கோட்டை தாலுகா மதுக் கூர் அருகே கல்யாணஓடை மழவேனிற்காடு தெற்குத் தெரு ஆனந்தநாயகம் - சசி ரேகா மகன் சுபாஷ் இருவ ருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், சிபிஎம் நிர்வாகிகள் இரு தரப்பிலும் பேசி ஒப்புதல் பெற்றனர். இந் நிலையில், ஒரத்தநாடு முரு கன் கோயிலில் ஞாயிற்றுக் கிழமை சுபாஷ் - திவ்யா இருவருக்கும் சிபிஎம் ஒரத்த நாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செய லாளர் கு.பாஸ்கர் ஆகியோர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதில், மூத்த தோழர்கள் பாப்பாநாடு வி.சிதம்பரம், வி.சுப்பையன், அரங்கசாமி, தியாகராஜன், துரைராஜ், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.