districts

img

மண்ணச்சநல்லூர், ச.கண்ணனூர் பேரூராட்சிகளில் முடிவுற்ற பாதாள சாக்கடை பணிகள் தொடக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் அர்ப்பணித்தார்

திருச்சிராப்பள்ளி, ஜன.23 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலிக் காட்சி வாயிலாக  மண்ணச்சநல்லூர் மற்றும் ச.கண்ண னூர் பேரூராட்சிகளில் முடிவுற்ற பாதாள  சாக்கடைத் திட்டப் பணிகளை சனிக் கிழமை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் சார்பில் மண்ணச்ச நல்லூர் பேரூராட்சியில் ரூ.30.11 கோடி மதிப்பீட்டிலும், எஸ்.கண்ணனூர் பேரூ ராட்சியில் ரூ.19.45 கோடி மதிப்பீட்டிலும்  என மொத்தம் ரூ.49 கோடியே 56  லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை  திட்டப் பணிகள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

 இத்திட்டத்தின் மூலம் மண்ணச்ச நல்லூர் மற்றும் ச.கண்ணனூர் பேரூ ராட்சிகளில் 1,758 ஆழ்துளை தொட்டி கள், 49.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதா ளக் குழாய்கள், 2 பிரதான கழிவுநீர் உந்து  நிலையங்கள் மற்றும் 6,019 வீட்டு இணைப்புகளின் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீரானது, மண்ணச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள 6.41 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப் பட்டு, பசுமைக் காடுகள் வளர்ப்புக்கு பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத் தின் மூலம் 50 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, செய்தித்துறை அமைச்சர் சாமிநா தன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோர் உடனிருந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் எழிலரசன் மற்றும் பேரூராட்சி களின் பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.