districts

img

கட்டி முடித்து 2 மாதமாகியும் திறக்கப்படாத வகுப்பறைகள்

பாபநாசம், ஆக.2 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் வித்யா பாடசாலை (எ) பாப நாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவி கள் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாண வர்கள் சிரமப்படுகின்றனர்.  குழந்தை நேயப் பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத் தில் எட்டு வகுப்பறை கட்டடம் கட்டி  முடித்து இரண்டு மாதங்களை கடந்தப் பின்பும் திறப்பு விழா காணப் படாமல் உள்ளது. இதனால் மாண வர்கள் வகுப்பறை வளாகத்தில் அமர்ந்து பயில்கின்றனர்.  இதுமட்டுமின்றி, பள்ளித்  தலைமையாசிரியர் அறையின்  மேற்கூரை காரை பெயர்ந்துள்ளது. பள்ளியின் பக்கவாட்டுச் சுவர்  இடிந்து விழுந்து விட்டதால்,  தகரம் வைத்து மறைக்கப்பட்டு உள்ளது. பள்ளியின் பின்பக்க காம்பவுண்ட் சுவரில் விரிசல் விட்டு சாய்ந்தவாறு, கீழே விழும்  நிலையில் உள்ளது. மாணவர் களுக்கு போதிய இடம் இல்லாத தால், வட்டாரக் கல்வி அலுவ லகத்தின் ஒரு கட்டிடத்தி லும் பள்ளி  இயங்கி வருகிறது.  இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், இடவசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சிலர் மாற்றுச்சான்றிதழ் வாங்கத் தொடங்கி விட்டனர். கட்டி முடித்த வகுப்பறையை திறப்ப தற்கு யார் தடையாக இருக்கி றார்கள் என்பது தெரியவில்லை. காலை உணவு சமையல கமும் போ திய வசதி இல்லா மல் உள்ளது. பழுது பார்க்க வேண்டிய நிலையில் சில கட்ட டங்கள் உள்ளன.  இதையெல்லாம் யாரிடம் சென்று முறை யிடுவது என்றுதான் தெரியவில்லை” என்றனர்.