கரூர், செப்.11 - மாநில அளவிலான கொங்கு சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கு இடையே நடை பெற்ற ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடை பெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டியில், 15 சிபிஎஸ்இ பள்ளிக ளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் 29 பேர் தங்கப்பதக்கமும், 24 பேர் வெள்ளிப் பதக்கமும், 22 பேர் வெண் கலப் பதக்கமும் வென்றனர். இப்போட்டி யில் பரணி வித்யாலயா மொத்தமாக 29 தங்கப் பதக்கத்தையும், 24 வெள்ளிப் பதக்கத் தையும், 22 வெண்கலப் பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரி விலும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் புள்ளிகளின் அடிப்ப டையில், இரண்டாவது முறையாக 75 பதக்கங் களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை யும் வென்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த, தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சி.ராமசுப்பிரமணியன், முதல்வர் எஸ்.சுதா தேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, ஒருங்கி ணைப்பாளர்கள், ஜூடோ பயிற்சியாளர்கள், சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங் காவலர் எம்.சுபாஷினி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.