districts

மகளிர் தின விழாவில் 1235 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி வங்கிக்கடன் வழங்கல்

திருவாரூர், மார்ச் 8-  திருவாரூர் மாவட்டம் காட்டூர் அஞ்சுகம் அம்மையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1235 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி வங்கிக்கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.  மாவட்டத்தில் உள்ள ஊரக சுய உதவிக்குழு வங்கி கடன், 11736 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 978 குழுக்களுக்கு, ரூ.82.18 கோடி மதிப்பீட்டிலும், பெருங்கடன் 744 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 8 குழுக்களுக்கு ரூ.5.57 கோடி மதிப்பீட்டிலும், நகர்புறம் சுய உதவிக்குழு வங்கி கடன் 2288 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 176 குழுக்களுக்கு ரூ.14.00 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணை மானியமாக 6 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 6 குழுக்களுக்கு ரூ.0.1580 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திடன் கீழ் 90 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 67 குழுக்களுக்கு ரூ.0.480 கோடி மதிப்பீட்டிலும் என 14864 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 1235 குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பொன்னம்பலம், முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாதபிரபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வங்கி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.