districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை இணைந்து வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிறன்று ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் அலுவலர் ஜெயலெட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)சைபுதீன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.