districts

விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா திருமயம் விராச்சிலை பகுதி கல்குவாரிகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம்

உயர்நீதிமன்றம் உத்தரவு  

மதுரை, ஏப்.25-  

    திருமயம் தாலுகா விராச்சிலை பகுதி யில்  கல்குவாரிகளுக்கு  அனுமதி வழங்கிய தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்  பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வழக்  கறிஞர் ஆணையத்தை  நியமித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

   இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்ப வர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு வினைத் தாக்கல் செய்திருந்தார்.  

   அதில், “புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் தாலுகா விராச்சிமலை பகுதியில் உள்ள வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல் குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பகுதியைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றன. அதோடு பழமையான புரா தனச் சின்னங்கள் நிறைந்த சிவன் கோவில் உள்ளது. அதன் அருகில் பஞ்சாயத்து அலு வலகம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன. இவ்வாறு குடியிருப்புகள் உள்ள  பகுதியில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என சட்ட விதிகளும் உயர்நீதிமன்ற உத்தரவுகளும் தெளிவாக உள்ள நிலையில் இதனை மீறி கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

   மேலும் கல்குவாரி நடத்துபவர்கள் இந்த பகுதியில் செல்லக்கூடிய நீர்நிலை வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்து, லாரி செல்லும் சாலையாக மாற்றி உள்ளனர்.இதனால் இந்த பகுதியின் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே சட்ட விதிகளுக்கு முரணாக கல் குவாரி  நடத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்ய  உத்தரவிட வேண்டும்.  

  இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி  அமர்வு முன்பு  செவ்வாயன்று நடைபெற் றது.  திருமயம் பகுதிகளில் உள்ள இரண்டு குவாரிகளிலும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை  ஆய்வு செய்வதற்கு இனியன் கார்த்திகேயன் என்பவரை வழக்கறிஞர் ஆணையமாக நியமித்து குவாரியிலிருந்து கோவில் உள் ளிட்ட பகுதிகள் வரை உள்ள தொலைவை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கறிஞர் ஆணையருக்கு மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்புத்தர வேண்டும்.மனு தாரர் வழக்கறிஞர் ஆணையருக்கு 25 ஆயி ரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர்.  பின்னர் வழக்கு விசா ரணையை ஒத்திவைத்தனர்.