கரூர், ஜூன் 12 -
கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பேரவை கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் வை.இர.அண்ணாவேலு தலைமை வகித்தார். தொமுச மாவட்ட செயலாளர் பழ.அப்புசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் எம்.பால்ராஜ், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் கே.கணேசன், ஹச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்தராஜ், எம்எல்எப் சங்க மாவட்ட செயலாளர் டி.எம்.குணாளன் ஆகியோர் பேசினர்.
மத்திய தொழிற்சங்கங்கள், தொழில் வாரியான சம்மேளனங்கள் இணைந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாநில தலைநகரங்களில் பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது, கரூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொள்வது, அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட மாநாட்டை, ஜூன் 26 அன்று மாலை 4 மணிக்கு, கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.