districts

img

தஞ்சை சாந்தபிள்ளை கேட் மேம்பால பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை மக்களவை உறுப்பினர் முரசொலி தகவல்

தஞ்சாவூர், செப்.10 -  தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பால போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி தெரிவித்தார்.  தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், கீழ் பாலம், பெரியகோயில் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அலுவ லர்களுடன் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்த பின், அவர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம் பாலப் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிச லாக உள்ளது. இது தொடர்பாக சட்டப்பேர வையில், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பாலத்திலிருந்து ராமநாதன் ரவுண் டானா வரை எவ்வாறு மாற்றம் செய்யலாம்  என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களு டன் ஆய்வு செய்து ஆலோசனை மேற் கொண்டோம். இந்தப் பாலம் வடிவமைப்பு குறித்து ஆய்வை பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். அவர்களிடமிருந்து பதில் வந்த பிறகு தொ டர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். கீழ் பாலத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சனை நீண்ட காலமாக  உள்ளது. இதில் தேங்கும் தண்ணீரை அருகி லுள்ள கல்லணைக் கால்வாயுடன் இணைக்க  முடியுமா என்பது குறித்து மாநகராட்சி அலுவ லர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. பெரியகோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இத னால், பெரியகோயில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு  சென்று ஆவன செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.