districts

img

மாநில அளவில் சிலம்பப் போட்டி பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

தஞ்சாவூர், நவ.1-  கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள லாலாபேட்டையில் மாநில அளவி லான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், வார் சிலம்பம்  என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதில் சேக் சாஜித், பூவிகா, சுந்தர் கணேஷ்,  அப்துல் ராபித், அப்துல் ராசித், கைலாஷ், அகிலன், சுனில் ராஜ், கவின்ராஜ் ஆகிய 9  மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். விஷா லினி, முகமது ஆசிக், முகில் ஆகிய மாண வர்கள் 2 ஆம் இடம் பிடித்தனர். ரோகித் ஸ்ரீராம், விஷால், அப்துல் முபின், நிகில்  ஆருக்சன், அஜ்மல் தீன் ஆகிய மாணவர்கள்  3 ஆம் இடம் பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டத்தையும் பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர் மருத.உதய குமார் மற்றும் ம.ஸ்பர்ஜன்ராஜ் ஆகியோரை  பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.