மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இயங்கி வரும் கிருபாலயம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகள் ஆகியவற்றை பொறையாரில் செயல்படும் தி லைஃப் ஆஃப் சில்ட்ரன் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் ஊழியர்கள் நேரில் வழங்கினர். தொடர்ந்து சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கும் புத்தாடைகளை வழங்கினர்.