மயிலாடுதுறை, மே 15-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட மீன்பிடி துறைமுகம் திங்களன்று திறக்கப் பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந் துள்ள முக்கிய மீனவ கிராமங்களில் தரங்கம் பாடியும் ஒன்று. இக்கிராமத்தில் 350 சிறிய மீன்பிடி கலன்களும், 150 விசைப்படகுகளும் உள்ளன.
இங்குள்ள மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு துறை முக வசதியின்றி அவதிப்பட்ட நிலையில், மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடி மதிப்பீட்டில் 10.6 ஹெக்டர் பரப்பளவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
கடல் மட்டத்தின் மேல் தூண்டில் வளைவு, மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், நிர்வாக கட்டிடம், சாய்வு தளம், சாலை வசதி களுடன், 800 சிறிய மீன்பிடிக் படகுகளும், 225 விசைப்படகுகளும் நிறுத்தும் வகையில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தரங்கம்பாடி மீன்பிடி துறை முகத்தை திறந்து வைத்தார்.
விழாவையடுத்து தரங்கம்பாடியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகா பாரதி, மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் துறை முகத்தை மீனவ மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம் பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, வட் டாச்சியர் காந்திமதி, மீன் வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ் குமார், உதவி பொறியாளர் அன்ன பூரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.