districts

img

திருச்சியில் இன்று வழக்கறிஞர்கள் பேரணி: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்  குழுவின் அவசர பொதுக்கூட்டம் ஜூன் 29 அன்று விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது.  அதில் புதிதாக இந்தி மொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா  சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் (பி.எஸ்) ஆகிய  சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்  பெறுதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என ஜூலை 1 முதல் வழக்கறிஞர்கள் நீதி மன்ற பணியிலிருந்து விலகி இருந்த னர்.  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள  3 புதிய சட்டங்களை திரும்ப பெற  வலியுறுத்தி திங்கட்கிழமை (ஜூலை  8) திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பாக திருச்சியில்  ஞாயிறன்று திருச்சி மாவட்ட வழக்க றிஞர் சங்க தலைவர் பாலசுப்ர மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சியில் திங்களன்று நடை பெறும் வழக்கறிஞர்கள் பேரணியில்  மாநிலம் முழுவதும் இருந்து 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பேரணியானது, திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை யில் இருந்து உழவர் சந்தை மைதா னம் வரை  நடைபெறும். பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த பொதுக்கூட்டத்தில் 3 புதிய  சட்டத் திருத்தம் தொடர்பாக விவாதம்  நடைபெறும். அதனை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான போராட்டம்  குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை சரத்து அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம் காவல்துறைக்கு சில சரத்துகளில் அதிக வரம்பு உள்ளது.  இந்த புதிய சட்டத்தில் கொண்டு  வரப்பட்டுள்ள நல்ல கருத்துகளை வரவேற்கிறோம். அதே சமயத்தில் இந்த சட்டத்தில் உள்ள சில சந்தே கங்களை ஒன்றிய அரசு களைய வேண்டும். இந்தி, சமஸ்கிருதத்தில் உள்ள சட்டங்களின் பெயர்களை மாற்றி ஆங்கில மொழியில் கொண்டு  வர வேண்டும். நாடாளுமன்றத்தில் மீண்டும் இந்த 3 புதிய சட்டங்களை விவா தத்திற்கு எடுத்துக் கொண்டு இதில்  உள்ள சந்தேகங்களை களைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, (ஜாக்)  பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், செயலாளர் சுகுமாரன், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி ஆகியோர் உடனிருந்தனர்.