பாபநாசம், டிச.14 - பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கருப்பூரில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரை மறித்து சாலை மறியல் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மூன்று தினங்க ளாக பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி யில் குடியிருந்த மக்களை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சமுதாயக் கூடங்களில் அரசு துறையினர் தங்க வைத்து உணவு வழங்கினர். இந்நிலையில் கபிஸ்தலம் அருகே உமை யாள்புரம் பகுதியில் மழை நீர் சூழ்ந்தப் பகுதியை பார்வையிட்டும், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்க்கவும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரி யங்கா பங்கஜம் வந்த போது, கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் பேருந்து நிலை யம் அருகில் கிராம மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். மறியல் செய்த கிராம மக்கள், தங்க ளது வீடுகள் மழையால் சேதமடைந்து விட்ட தாகவும், சேதமடைந்த வீடுகளை சீர மைத்துத் தரவும், புதிய வீடுகள் கட்டித் தரவும் கோரிக்கை வைத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சேதமடைந்த வீடுகளை சீர் செய்துத் தரவும், புதிய வீடு கட்ட பரி சீலனை செய்வதாகவும் உறுதியளித்தார். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப் பட்டது.