districts

img

திருவிடைமருதூர் மக்கள் சேவையில் ‘செங்கொடி சேவை மையம்’

கும்பகோணம் ஆக.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில், ‘செங் கொடி சேவை மையம்’ என்ற  தலைப்பில் சிபிஎம், சிஐடியு  இணைந்து மக்கள் சேவை யில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு தொழி லாளர் நலவாரிய பதிவு மற்றும் அரசு சான்றிதழ்கள் பெற பதிவு உள்ளிட்ட சேவையில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் திரு விடைமருதூர் தாலுகா சாத்த னூர் கிராமத்தைச் சேர்ந்த  கட்டுமானத் தொழிலாளி  சாமிநாதன், சிஐடியு கட்டு மான தொழிற்சங்கத்தின் மூலம் (செங்கொடி சேவை மையம் வாயிலாக) தமிழ் நாடு கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தில் உறுப் பினர் பதிவை செய்து வைத் திருந்தார்.  இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய திருமண உதவி திட்டத்தில் பணப் பயன்பெறுவதற்கு திருவிடைமருதூர் செங் கொடி சேவை மூலம் விண்ணப் பிக்கப்பட்டது. விண்ணப் பித்த ஆவணங்களின் அடிப் படையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல வாரிய திருமண உதவித் தொகை ரூ.20,000 பெறப் பட்டு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில், கட்டுமான  சங்கத்தின் திருவிடைமரு தூர் ஒன்றிய தலைவர் மரி யாபிள்ளை, செயலாளர் கோவிந்தராஜ், நெசவாளர் சங்க தலைவர் பக்கிரிசாமி  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.