districts

img

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு துணைவேந்தர் பாராட்டு

 தஞ்சாவூர், ஜன.18-  தெற்கு மற்றும் மேற்கு இந்திய பல்கலைக் கழகங்க ளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 12 வரை, சென்னையில் உள்ள தமிழ்நாடு  உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழ கத்தில் நடைபெற்றன.   போட்டிகளில், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கி யத்துறை மாணவர்கள் ச.பிரியதர்ஷினி, ர.நிர்மல் கிசான்,  நாடகத்துறை மாணவி சி.சீதளா தேவி, சமூக அறிவியல் துறை மாணவர் அ.யோகேஷ் ஆகியோர் 4 X 400 மீட்டர் (மிக்ஸ்ட் ரிலே) போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் கலந்து கொள்ளும்  போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பாராட்டினார்.   பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், விளை யாட்டு மேம்பாட்டு மைய இயக்குநர் முனைவர் பெ.இளை யாபிள்ளை, உடற்கல்வி ஆசிரியர் செ.பிரபாகரன் மற்றும் தேர்வான மாணவர்கள் உடனிருந்தனர்.