தஞ்சாவூர், ஜன.6- தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் உள்ள சிற்பங்களில், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் வியாழனன்று ஆய்வு மேற் கொண்டனர். தஞ்சை பெரிய கோவில் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய தொல் லியல் துறை பராமரிப் பில் இருந்து வருகிறது. இதனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவிலின் பழமை மாறா மல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தொல்லி யல் துறையைச் சேர்ந்த 4 பேர் கயிறு உதவியுடன் 216 அடி விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து தொல்லி யல் துறை வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களி லும் ரசாயன கலவையுடன் வர்ணம் பூசும் பணி வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங் கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? எவ்வாறு ரசாயன கலவை பூசுவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறை வடைந்ததும் இதர கோபுரத் திலும் பணிகள் மேற்கொள் ளப்படும்’’ என்றனர்.