தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கூட்ட அரங்கில் சிறுதொழில் மேம்பாட்டு நிறு வனம் (சிப்போ) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய, கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தலை யாட்டி பொம்மைகள் தயாரித்தல், பித் வேலைப்பாடு மற்றும் தஞ்சாவூர் பெயிண் டிங் ஆகிய பயிற்சிகள் கடந்த டிச.4 முதல் மார்ச் 11 வரை 3 மாதங்கள் நடைபெற்றன.
இப்பயிற்சியில் 18 முதல் 35 வரை வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இரு பாலரும் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது மாதத்திற்கு ரூ.12,500 உதவித்தொகை வழங்கப்படு கிறது. தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப் படுகிறது, பயிற்சி கையேடு தரப்படுகிறது.
இப்பயிற்சியில் அந்தந்த துறையில் கள ஆய்வு மேற்கொள்ளுதல், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் கற்றுத் தரப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்குவது மற்றும் வங்கிக்கடன் பெறு வது பற்றிய ஆலோசனை வழங்கப்படு கிறது.
அதனடிப்படையில் தஞ்சாவூரில் கை வினைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகளான பித் வேலைப்பாடுகள் (3 மாதம்), தஞ்சாவூர் பெயிண்டிங் (3 மாதம்) மற்றும் தலையாட்டி பொம்மை (3 மாதம்) பயிற்சிகள் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்று நிறைவடைந்து உள்ளன. ஒவ்வொரு பயிற்சியிலும் 30 பங்கேற் பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந் துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, கைவினைத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்த 90 பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், சிப்போ பொது மேலாளர் க.பழனிவேல்முரு கன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் எஸ்.இராஜேந்திரன், தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட மேலா ளர் ஏ.பாலாஜி, தமிழ்ப் பல்கலைக்கழக பதி வாளர் (பொ) சி.தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ.இளையாப்பிள்ளை, சிற்பத் துறை தலைவர் வே.லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.