districts

img

மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் ட்ரோன்கள் அரசு அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் தஞ்சை இளைஞர்

தஞ்சாவூர், ஜூன் 1 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை கூட்டுறவு ஸ்ரீநகர் கோ-ஆப ரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பால்ராஜ்(33). இவர் தஞ்சா வூரில் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார்.

இதையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று ஆளில்லா ட்ரோன்களை அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வடிவமைத்துக் கொடுத்து, அதில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

பின்பு சொந்த ஊரில் அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் களை வடிவமைத்து வழங்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாடு வேலைவாய்ப்பை விட்டுவிட்டு தஞ்சாவூர் வந்தார்.

தஞ்சாவூரிலேயே கடந்த இரு ஆண்டுகளாக அவசர சிகிச்சைக் காக மருந்துப் பொருட்களையும், ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளை யும் கொண்டுசெல்லும் வகையில் ட்ரோன் வடிவமைத்தார்.

ஸ்ரீதர் வேம்பு பாராட்டு

முழுவதும் சொந்த நாட்டு தயாரிப்பில் 3டி பிரிண்டிங்கை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன் களை அண்மையில் நேரில், ஸோகோ நிறுவனத்தின் தலைவரும், பத்மஸ்ரீ விருதாளருமான ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டு, தினேஷின் ட்ரோன் வடி வமைப்பை பாராட்டினார். மேலும், தனது நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்களை மேலும் வடிவமைக்க அதற்கான முதலீடுகளை வழங்க முன் வந்துள்ளார்.

தினேஷ் பால்ராஜால் உரு வாக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் மூலம் மலைவாழ் பகுதிகளில் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான மருந்துப் பொருட்களையும், இதர அறு வை சிகிச்சைக்கு தேவையான மருந்துப் பொருட்களையும், உடல் உறுப்புகளையும் விரைவாக கொண்டு செல்ல முடியும். இதற்கு, தமிழ்நாடு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் பறக்க பேட்டரி வசதி

இதுகுறித்து தினேஷ் பால்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரோன் தொடர்பான கண்டு பிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறேன். உலகின் பல நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வந்துள்ளேன். ஜெர்மன், நெதர்லாந்து நாடுகளில் மருந்துப் பொருட்களை விரைவாக கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்தப்படுகின்றன.

இதேபோல் நம் நாட்டிலும் மருந்துப் பொருட்களை, மருத்துவ சிகிச்சை எளி தில் கிடைக்காத மலைவாழ் கிரா மங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையிலும், ட்ரோன் உருவாக்கப் பட்டது. இந்த ட்ரோனில் மருந்து பொருட்களை விரைந்து கொண்டு செல்வதன் மூலம், மகப்பேறு மர ணங்கள், பாம்பு தீண்டுவதால் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட பல உயிரி ழப்புகளை தடுக்க முடியும்.

இந்த ட்ரோன் மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில், 400 மீட்டர் உயரத்தில் செல்லும், 7 கிலோ வரை எடை உள்ள மருந்துப் பொருட்களை எளிதில் எடுத்துச் செல்லும். இதன் மொத்த எடை 25 கிலோ. தொடர்ச்சியாக ஒரு  மணி நேரம் பறந்து செல்லக்கூடிய வகை யில் பேட்டரிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

ட்ரோன் பறக்க தேவையான செயற்கைக் கோள் மொபைல் செயலி  பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதற்கான  அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். வான் வெளியில் பறக்க அதற்கான தடை யின்மை சான்றை பெற்றுள்ளேன்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில்...

தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடத்திய உலக  முதலீட்டாளர்கள்  மாநாட்டில் கலந்து கொண்டு, எனது ட்ரோன் கண்டு பிடிப்பை காட்சிப் படுத்தினேன். 

அப்போதே அரசு மருத்துவமனை களுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை கொண்டு செல்ல இந்த ட்ரோனுக்கு அனுமதி வழங்க கேட்டுக் கொண்டேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் பட்சத்தில், பல ட்ரோன்களை உருவாக்கி அதனை செயல்படுத்த முடியும்.

அப்போதே அரசு மருத்துவமனை களுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை கொண்டு செல்ல இந்த ட்ரோனுக்கு அனுமதி வழங்க கேட்டுக் கொண்டேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் பட்சத்தில், பல ட்ரோன்களை உருவாக்கி அதனை செயல்படுத்த முடியும்.