districts

மீன் வளத்துறையின் அறிவிப்பால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர், ஜூன் 29 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் விசைப்படகு சங்க மீன வர்கள் மீன் வளத்துறை அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என சங்கத்தின் அவ சரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர்.  

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள்  சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சேதுபா வாசத்திரம் சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. 

மீனவர் பெயரில் ஒரு படகு மட்டும் இருந்தால் மட்டுமே டீசல் மானியம் வழங்கப் படும் என்ற மீன் வளத்துறையின் திடீர் அறி விப்பால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குடும்பத்தில் தந்தையின் பெயரில் மூன்று, நான்கு படகு கள் இருக்கும். அவரது பிள்ளைகள், பெரிய வர்கள் ஆன பிறகு தனித்தனியாக பிரித்து  கொடுத்து தொழில் செய்வார்கள். இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளா மல் ஒருவருக்கு ஒரு படகுக்கு தான். அதற்கு  மட்டும்தான் டீசல் மானியம் என்ற அறிவிப்பு  மீன்பிடித் தொழிலையே கேள்விக்கு உள்ளாக்கி விடும். எனவே உடனடியாக இந்த  அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

கால அவகாசம் தேவை

திடீர் அறிவிப்பால் மானிய விலை டீசல்  கிடைக்காமல், பல படகுகள் தொழில் செய்ய  முடியாத நிலை ஏற்பட்டு பலர் வேலை இழந்து  வாழ்வாதார பிரச்சனையை சந்திக்க நேரி டும். எனவே முதல்கட்டமாக பெயர் மாற்றம்  செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து பிறகு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழகம் முழுவதும், மானியத் திட்டத் தில் மிகக் குறைந்த அளவே படகுகள் உள்ள தால் அரசுக்கு பெரிய இழப்பாக கருதாமல்  மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு கால அவகாசத்துடன் தகுதியுள்ள  குடும்ப உறுப்பினர்களின் பெயரில், பெயர்  மாற்றம் செய்த பிறகு, புதிய உத்தரவை நிறைவேற்ற வேண்டும். 

காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

கடந்த வாரம் மல்லிப்பட்டினத்திலிருந்து நான்கு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற கண்ணாடியிழை படகு கவிழ்ந்து 3 பேர் உயிர் தப்பிய நிலையில், அந்தோணி என்ற  மீனவரை மட்டும் காணவில்லை. அவரை மீட்டுத் தரவும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி யிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி  வருகிற ஜூலை 10 அன்று, தஞ்சை ஆட்சியர்  அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பது என்றும், ஜூலை 12 அன்று கிழக்கு  கடற்கரை சாலையில் காலை 10 மணி  முதல் மாலை 4 மணி வரை வாழ்வாதாரம் கேட்டு சாலை மறியலில் ஈடுபடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.