districts

சென்னை முக்கிய செய்திகள்

தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்

திருவள்ளூர், நவ 16- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்  பூண்டி பாத்தபாளையத்தில் காமாட்சி மின்உற்பத்தி மற்றும் கம்பி உற்பத்தி தனியார் தொழிற்சாலை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில் வெள்ளியன்று (நவ 16),  இரவு நேர பணிக்காக வந்த உத்தரபிர தேசத்தை சேர்ந்த 32 வயதுடைய  அகிலேஷ்  என்ற தொழிலாளி மிகவும் ஆபத்தான கொதிகலன் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கோளாறு காரண மாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வந்ததாக கூறப்படும் அகிலேஷ் என்ற தொழிலாளி மீது கொதிகலனில் இருந்து சிதறிய இரும்பு குழம்பு பட்டு பெரும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த அகிலேஷை மீட்டு தொழிற்சாலை நிர்வாகம் கும்மிடிப்பூண்டி யில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 80 விழுக்காடு தீக்காயங் கள் ஏற்பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கேஎம்சி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி  சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பாது காப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தேவை யான பாதுகாப்பு சாதனங்களையும் நிறு வனங்கள் வழங்குவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் போது கடுமையாக பாதி க்கப்பட்டு பலர் உயிரிழக்க வேண்டி யுள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  பண்டிகை கால தொகை வழங்குக சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.16-  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதுவை அரசு அறிவித்தபடி பண்டிகை கால தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநில பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. செயலற்ற தொழிலாளர் துறையால் முறைசாரா தொழிலாளர்களுக்கு அறிவித்த தீபாவளி உதவித்தொகை ரூ.1,500 இதுவரை வழங்கப்படவில்லை . அரசின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறைசாரா தொழிலாளர் நல சங்க உறுப்பினர் தொழிலாளர்களுக்கு, மாநில முதல்வர் ரங்கசாமி ரூ.1,500 தீபாவளி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கான கோப்பு அக்.29 அன்று ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளது. நவம்பர் 6 அன்று சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் துணை நிலை ஆளுநர்  ஒப்புதல் அளித்தார். தீபாவளிக்கு முன்னதாகவே இப்பணியை முடித்து இருக்க வேண்டிய தொழிலாளர் துறை ஆணையர்   மற்றும் துணை ஆணையருக்கும் தொழிலாளர்கள் மீது அக்கறையும் , ஆர்வமும் இல்லை. தொழிலாளர் துறை செயலர் தொழிற்சங்க தலைவர்களை சந்திக்க மறுத்தது மட்டுமின்றி, தொழிலாளர் பிரச்சினையில் அக்கறையும் ,பொறுப்பும் இல்லாமல் நடந்து கொண்டுள்ளார். புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் உழைப்பாளி மக்கள். குறிப்பாக மாநில உள்நாட்டு உற்பத்தியில் 94 விழுக்காடு தொழிலாளர்கள் உழைப்பின்  பாத்திரமாகும். மாநில வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்திடும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட உழைப்பு சந்தை தொடர்பான தொழிலாளர் துறை செயலற்று, கோமா நிலையில் உள்ளது. முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. இந்த நிலையை சரி செய்திட மாநில முதல்வர் உடனடியாக தலையிடவேண்டும். ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தீபாவளி பரிசு தொகை ரூ. 1,500 பட்டுவாடா செய்ய கேட்டுக்கொள்கிறோம் . மேலும் தொழிலாளர் துறையை துடிப்புடன் செயல்படும் துறையாக மாற்றிட பொருத்தமான அதிகாரிகளை நியமித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் தீபம் ஏற்றிய போது  தீ விபத்தில் கருகிய பெண் உயிரிழப்பு

சென்னை, நவ. 16- சென்னை தியாகராய நகரில் வீட்டில் தீபம் ஏற்றிய போது நேர்ந்த தீ விபத்தில் கருகிய பெண், மருத்துவமனையில் இறந்தார். தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பன். இவர் கப்பலுக்கு தேவை யான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். முருகப்பன் மனைவி ஆண்டாள் (58). இவர் கடந்த 4}ஆம் தேதி வீட்டில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினார். அப்போது ஒரு அகல் விளக்கு மீது அவரது சேலை விழுந்தது. இதில் சேலை சிறிது நேரத்தில் தீப் பிடித்து எரியத் தொடங்கியது. இதை ஆண்டாள் கவனிக்காததினால் தீ, அவர் சேலை முழுவதும் பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தமிட்ட ஆண்டாளை அங்கிருந்தவர்கள் மீட்டனர். பலத்தக் காயமடைந்த அவரை, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆண்டாள், சனிக்கிழமை இறந்தார். இது குறித்து பாண்டி பஜார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.

லஞ்சம்: வட்டாட்சியர் உள்ளிட்ட  மூன்று பேருக்கு சிறை தண்டனை

கடலூர்,நவ.15-  சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட மூன்று பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள டி.பவழங்குடியை சேர்ந்தவர் மாபூஷா மனைவி கமர்நிஷா. என்.எல்.சி. நிறுவனத்தில் உணவகத்தில் வேலை செய்த மாபூஷா உடல்நிலை சரியில்லாமல் இறந்ததால் அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதற்காக தனக்கும், தனது மகனுக்கும் இருப்பிட சான்று, வருமான சான்று, சாதி சான்று மற்றும் ஓ.பி.சி. சான்று பெறவேண்டி இ-சேவை மையம் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.  இதையடுத்து அப்போதைய ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் கண்ணன் ( வயது 43), துணை வட்டாட்சியரான அருள்பிரகாசம் (வயது 56) ஆகியோர் சான்று வழங்க வேண்டும் என்றால் தங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறினர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கமர்நிஷா, கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி கமுர்நிஷார் கடந்த 29.8.2019 அன்று ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று  கண்ணன், அருள்பிரகாசம் ஆகியோரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.14 ஆயிரத்தை கொடுத்த போது போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  மேலும் லஞ்ச பணம் வாங்க உடந்தையாக இருந்த அலுவலக ஊழியர் உத்திரவன்னியன் (வயது 30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கு கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி நாகராஜன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கண்ணன், அருள்பிரகாசம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், உத்திர வன்னியனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மேலும் 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர் மழையால்  என்எல்சி சுரங்கத்தில் நிலக்கரி  வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு

கடலூர், நவ.16 – கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு அடைந்துள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகியவற்றின் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக  விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை (நவ.16) நெய்வேலி பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக என்எல்சி திறந்தவெளி சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடையின்றி நடைபெற்று வருகிறது. மேலும் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்களில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து நீர்வீழ்ச்சி போன்று ஓடுவதால் தொடர்ந்து நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை,நவ.16- ஐதராபாத்தில் இருந்து சனிக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று திருப்பதி நோக்கி புறப்பட்டது.   அதில் 169 பயணிகளும் 4 விவிமான ஊழியா்களும் இருந்தனா். அந்த விமானம் வானில் சென்ற போது திடீரென அதில் எந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த விமானி, உடனடி யாக விமானத்தை தரையிறக்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக சென்னை விமான நிலையத்திடம் அனு மதி வேண்டினார். இதை யடுத்து அனுமதி கிடைத்த வுடன் அவசர அவசரமாக இண்டிகோ விமானம் சென்னை விமான நிலை யத்தில் தரையிறக்கப் பட்டது. இதை யடுத்து அதில் இருந்த பயணிகள், ஊழியா்கள் உயிர் தப்பினர்.