districts

மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 20 முதல் விண்ணப்பம் விநியோகம் அமைச்சர் தகவல்

சென்னை,ஜூலை 12-

     குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு ரேசன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

    முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. எனவே, இந்த பயனாளிகள் விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிரா கரிக்கப்படும்.

    ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துப வர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களும் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது. இதற்காக 8 வகை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்கு தான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அனைத்து நியாய விலை கடைகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

   நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவி முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர் களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

;