மக்கள்விரோத ஒன்றிய அரசின் செயல்பாட்டை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அரசு, பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை விளக்கி, திருவண்ணாமலை போளூர் சாலையில் மறியல் விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சௌந்தரராஜன் (தொமுச), வே. முத்தையன் (ஏஐடியுசி), காங்கேயன், சேகர், சிவராஜ், மு.பாலாஜி (சிஐடியு), சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், நகர செயலாளர் எம். பிரகலாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.