அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் செங்கல்பட்டில் தந்தை பெரியார் சிலை முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலையரசி தலைமையில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர். மு.பிரியங்கா தமுஎகச மாவட்ட தலைவர். இ.சங்கரதாஸ் புத்தர் ஒளி பண்பாட்டு பேரவையின் மாநில மூத்த ஆலோசகர், நா.வீரமணி , ததீஒமு மாவட்டப் பொருளாளர். அ.ராமலிங்கம் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி ஆகியோர் காதல் மற்றும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு புத்தகங்கள் காதலர் தின நினைவு பரிசு வழங்கினர்.