சிதம்பரம், ஜூலை 12- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் சாரண இயக்கத்தின் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள குருளை யர்கள், நீல பறவைகளுக் கான மாநில விருது பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிதம்பரம் சாரண மாவட்டத்தின் தலை வரும் வீனஸ் கல்விக் குழுமத்தின் தாளாளரு மான குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு ஆணையர் வேலாயுதம் வரவேற்றார். குருளையர் பிரிவு ஆணை யர் கவிதா, நீலப் பறவை யர் பிரிவு ஆணையர் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த முகாமில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 42 மாணவர்கள் (குருளை யர்கள்), நீலப் பறவையர் 21 மாணவிகள் (நீலப் பறவை யர்) கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்சியாளர்கள் வேணுகோபால், இளைய குமார், வேலாயுதம், ஜெயந்தி, ஆகியோர் மாணவர்களுக்கு பாடல் பயிற்சி, கயிற்றுக் கலை, முதலுதவி, வனக்கலை குறி யீடு, கதை பயிற்சி, சிறப்பு சின்னம் போன்ற பயிற்சி களை அளித்தனர்.