தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கிளை சார்பில் சிறப்பு பேரவை வியாழனன்று (டிச. 15) நடைபெற்றது. திட்டத் தலைவர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் தங்க.அன்பழகன், திட்டச் செயலாளர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் பேசினர்.