திருவண்ணாமலை,அக்.6- திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் உயர்த்திய பருவத் தேர்வு கட்ட ணத்தை குறைக்க வலி யுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தியதால் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும், சங்கத்தின் நிர்வாகிகளை விடுவிக்க கோரியும் காவல்துறை வாகனத்தை சிறைபிடித்து மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் கல்லூரி நிர்வாகம், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், மாணவர் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்ட னர். பல்கலைக்கழக நிர்வாகத் திடம் ஆலோசனை நடத்தி தேர்வு கட்ட ணம் குறைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.