districts

பணிவரன்முறை கோரி கடலூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், நவ.19- பணிவரன்முறை செய்யக்கோரி கடலூர்  மாநகராட்சி  தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாநகராட்சியில் 144 தூய்மை பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகள் பணி முடித்ததும் பணிவரன் முறை செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. இதையடுத்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  இந்த வழக்கில், 2002 முதல் பணி வரைமுறை செய்ய வேண்டும் என்று 5.9.2013 அன்று நீதிமன்றம் உத்தர விடப்பட்டது. பெருநகராட்சி மன்ற இயல்பு கூட்டத்தில் 23.2.2015 இல் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.  இந்த நிலையில், 144 மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி காலத்தை பணி வரன்முறை செய்யப்பட்டதை அனுமதித்து அரசாணை வெளியிட்டு பழைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சிஐடியு தலைவர் ப.அரசகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் க.நாகப்பன், கி.விநாயகமூர்த்தி, துணைச் செய லாளர்கள் கு.நாகராணி, ஏ.குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  செயலாளர் த.செல்வராஜ் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், கடலூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் ச.சிவராமன், துணை நிறுவன சி.பக்கிரி, வங்கி ஓய்வூதியர் சங்கத் தலைவர் பி.கே.வி.ரமணி, மாநகராட்சி தொழிலாளர் சங்க ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.