districts

img

தீக்குளித்து பலியான இளைஞர் குடும்பத்திற்கு வீடு வழங்க கோரிக்கை

திருவள்ளூர்,ஜூலை 8- கும்மிடிப்பூண்டியில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரி வித்து தீக்குளித்து பலி யான ராஜ்குமார் (33),  குடும்பத்திற்கு,  இல வச வீட்டுமனை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ராஜ்குமார் குடும்ப த்திற்கு இலவச குடிமனை பட்டா, தொகுப்பு வீட்டை கட்டி கொடுக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ரா ஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீக்குளித்த நிலையில் வட்டாட்சியர் ப்ரீத்தி,  குடி யிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. ராஜ் குமாரை தற்கொலைக்கு தூண்டிய வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டச் செயலாளர் ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.