districts

img

மாணவனை தாக்கிய ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை, ஜன. 28- சென்னை ராயபுரத்தில் மான்ஸ்போர்ட் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால்  5ஆம் வகுப்பு  படிக்கும் மாணவர் மணீஸ்வரனின் காதை பிடித்து ஆசிரியர் திருகியுள்ளார். இதில் சிறுவரின் காதில் பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கு காரணமான  பள்ளி ஆசிரி யையும், மான்ட்போர்ட் பள்ளி நிர்வாகத்தையும், தொடர்ச்சியாக  மாணவர்கள் மீது நடைபெறும் தாக்கு தல்களை கண்டுகொள்ளாத  தமிழக பள்ளி கல்வி துறையையும் கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பில் ராயபுரத்தில் ஞாயிறன்று (ஜன. 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்திலும் இணைத்து பதிய வேண்டும், மாணவருக்கு ரூ25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் , தனி யார் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மீது கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் காவ்யா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பி னர் குணா, மாவட்டச் செயலாளர் நிதிஷ்குமார், செயற்  குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா, அகல்யா, அலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.