உச்சநீதிமன்றம் கூறியும் தேர்தல் பத்திரங்கள் பெற்றவர்களின் பட்டியலை வழங்க மறுத்து கூடுதல் கால அவகாசம் கேட்டு, மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ நிர்வாகத்தின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியாத்தம் எஸ்பிஐ வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பி.காத்தவராயன் , சி. சரவணன் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், வே.குபேந்திரன் ஆகியோர் பேசினர்.