districts

சிதம்பரம் பகுதியில் மழை பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு

சிதம்பரம், நவ.28- கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை மற்றும் தில்லைவிடங்கன் கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாது காப்பு மையம், கிள்ளை பேரூ ராட்சி குச்சிப்பாளையத்தையும் பார்வை யிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கீழமூங்கிலடி கிராமம் உள்ள ராகவேந்திரா கல்லூரி அருகே பாசிமுத்தான் ஓடை, நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் பேருந்து நிலையம் மேம்பாலம் அருகே பாசிமுத்தான் ஓடை மற்றும் முத்தையா நகரில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் ஜேசிபி இயந்திரம் மூலம் செடி கொடி களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.   தொடர்ந்து  பேசிய ஆட்சியர், பைசல் மஹால் அருகே மழைநீர் செல்வதற்கு ஏதுவாக தில்லை காளியம்மன் ஓடையில் ஜேசிபி வாகனம் மூலம் தூர்வாரும் பணி களும் விரைவாக நடைபெற்று வரு கிறது, மேலும் அங்கு மழைநீர் வடிந்தோட ஓடையின் கரையில் இருந்த தேவையற்ற செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடை பெற்று வருகிறது. அனைத்து வடி கால் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி களை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். கிள்ளை பேரூராட்சி தாழ்வான பகுதியாகவும், மழைநீரில் பெரிதும் பாதிப்படையும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. தொடர்ந்து, மழை பெய்யும் பட்சத்தில் பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.