districts

img

இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மஜகஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் நடத்தி இனப்படுகொலை செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது  என வலியுறுத்தியும் ஞாயிறன்று (அக்.6) சென்னை பாரிமுனை அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து துறைமுகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு உள்ளிட்ட பலர் பேசினர்.