districts

img

அதிகாரி பேச்சு வார்த்தையால் ரேசன் கடை போராட்டம் ஒத்திவைப்பு

கடலூர், அக்.26- நியாயவிலை கடையை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க வேண்டும், பண்டிகை காலம் என்பதால் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் தடையில்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக திருப்பாதிரிப்புலியூர் ரேஷன் கடை முன்பு வியாழக்கிழமை (அக்.24) ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், சிபிஎம் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக உறுதி யளித்தார். இதையடுத்து  ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப் பட்டது. இந்த பேச்சுவார்த்தை யில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாநகர குழு உறுப்பினர்கள் சே.  கருணாகரன், கே.பி.செந்தில்குமார், எஸ்.கே. தேவநாதன், சாந்தகுமாரி, டி.எஸ். தமிழ்மணி, ஏ.பாபு, காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.