விழுப்புரம் நகராட்சியிலுள்ள 42 வார்டுகளிலும் கொசு மருந்து தெளிப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.275 தினக்கூலி அடிப்படையில் தற்காலிக களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் அந்தப் பணியிலிருந்து 57 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தங்களுக்கு மீண்டும் அந்தப் பணியை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.